அருந்ததி ராய் அவர்களின்
பிறந்த நாள் இன்று 24.11.2013
அருந்ததி ராய் இந்தியாவின் நட்சத்திர எழுத்தாளர், களப் பணியாளர், அவரது நாவலான “The God of  Small Things” (சின்ன விஷயங்களின் கடவுள்) புக்கர் பரிசு பெற்றதும் உலகப் புகழை அடைந்தார். பின்னர் மேத்தா பட்கரின்  “நர்மதா பச்சாவோ அந்தோல”னில் (நர்மதாவைக் காப்பாற்றும் போராட்டம்) தன்னை இணைத்துக்கொண்டார். இந்திய அரசமைப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீரிகள், ஆதிவாசிகள் முதலிய பலருக்காகவும் குரல் எழுப்பிவருகிறார். இந்துத்துவத்தின் கடுமையான விமர்சகர். தலித் விடுதலையில் ஆழ்ந்த சரிசனம் கொண்டவர். ஆய்வின் வலுக்கொண்ட அவரது கட்டுரைகள் அவற்றின் கருத்துக்களுக்காகவும் நடைக்காகவும் உலகக் கவனம் பெற்றவை.
 
No comments:
Post a Comment